*நோயாளிகள் அதிர்ச்சி
விராலிமலை : விராலிமலை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குடிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிக்குள் செத்து மிதந்த இரண்டு குரங்குகளாள் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.விராலிமலை-மணப்பாறை சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது இங்கு தினமும் விராலிமலை சுற்றுப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நோய் தொடர்பாக வெளி நோயாளிகளாகவும் உள் நோயாளிகளாகவும் தினசரி வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்ந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிக்குள் கடந்த இரண்டு நாட்களாக இரண்டு குரங்குகள் செத்து மிதக்கின்றன.
இதை அறியாது தினசரி சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இந்த மருத்துவமனையில் இருக்கும் இந்த தொட்டியில் இருந்து வரும் குடிநீரை அருந்தி தங்கள் தாகத்தை தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மருத்துவமனைக்கு வந்த சில நோயாளிகள் இந்த குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் குடிநீரை அருந்தும் போது ஒருவித துர்நாற்றம் வீசி உள்ளது இதில் சந்தேகமடைந்த நோயாளிகள் குடிநீர் தொட்டியை சோதனை செய்தபோது இரண்டு குரங்குகள் குடிநீர் தொட்டிக்குள் செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனை அலுவலர்களின் இந்த அலட்சிய போக்கால் செய்வது அறியாது நோயாளிகள் திகைத்து நின்றனர். இது தொடர்பான செய்தி முதன் முதலில் சன் நியூஸ் தொலைக்காட்டசியில் வெளியானது இதையடுத்து சுதாரித்து கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக களத்தில் இறங்கி இறந்து கிடந்த குரங்கை அகற்றி நீரை வெளியேற்றி தொட்டியை தூய்மைபடுத்தினர்.
The post விராலிமலை அரசு மருத்துவமனை குடிநீர் தொட்டிக்குள் செத்து மிதக்கும் இரண்டு குரங்குகள் appeared first on Dinakaran.